Showing posts with label உமர்தம்பி. Show all posts
Showing posts with label உமர்தம்பி. Show all posts

Wednesday, July 14, 2010

தமிழ் கணினி அறிஞர் "உமர்தம்பி" அரங்க நிகழ்ச்சிகள் part -1

சமீபத்தில நடந்து முடிந்த தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் கணினி அறிஞர் "உமர்தம்பி" அவர்களின் பெயரிட்ட அரங்கத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளை இங்கு கண்டு ரசிக்கலாம்.

1



2



3



4



5



தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சிகளை படம்பிடித்து YOUTUBEல் வெளிட்டவருக்கு மிக்க நன்றி.

Sunday, June 27, 2010

உமர்தம்பிக்கு விருது - புதிய புகைப்படங்கள் பகுதி - 2

சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பி அவர்களுக்கு 'தமிழ் கணினி அறிஞர்' என்ற விருது' வழங்கப்பட்ட செய்தி, மற்றும் புகைப்படங்கள் முந்தைய பதிப்பில் பார்த்தோம். இதோ மேலும் புகைப்படங்கள்

அதிரை உமர்தம்பிக்கு விருது வழங்கப்படும் முன்பு உமர்தம்பி அவர்களின் தமிழ் இணைய சேவை பாராட்டி உமர்தம்பி அவர்களின் குடும்பத்தவர்களை கவுரவிக்கும் புகைப்பட காட்சிகள்.

மேலும் புதிய புகைப்படங்கள் நம் வலைப்பூவில்  விரைவில் வெளியிடப்படும், தொடர்ந்து இணைந்திருங்கள்.

புகைப்படம் உதவி செய்த சகோதரர் கோவை சஞ்சய் காந்திக்கு நன்றி.

மேலும் புகைப்படங்கள் இன்னும் தெளிவாக பார்க்க அதிரைநிருபர் வலைப்பூவிற்கு சென்று பாருங்கள்.

Saturday, June 26, 2010

உமர்தம்பிக்கு விருது - புதிய புகைப்படங்கள் பகுதி - 1

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பிக்குதமிழ் இணைய அறிஞர்’ என்ற விருது இன்று மாலை 6:00 வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்பட்டது, தமிழ் இணைய உலகில் பிரபல்யமான தமிழ் இணைய ஆர்வளர் திரு.பாலா பிள்ளை அவர்கள் விருதை வழங்கினார்கள், உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர். அப்துல் காதர் அவர்களும், உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் மொய்னுதீனும் விருதை பெற்றுக் கொண்டனர்.


உமர்தம்பி அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த சிங்கப்பூர் தமிழ் சங்கத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
புகைப்படம் உதவி செய்த சகோதரர் கோவை சஞ்சய் காந்திக்கு நன்றி.

மேலும் புகைப்படங்கள் இன்னும் தெளிவாக பார்க்க அதிரைநிருபர் வலைப்பூவிற்கு சென்று பாருங்கள்.


உமர்தம்பிக்கு விருது வழங்கப்பட்டது

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பிக்கு ‘தமிழ் இணைய அறிஞர்’ என்ற விருது இன்று மாலை 6:00 வழங்கப்பட்டது.
                                                                                                                      
சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்பட்டது, தமிழ் இணைய உலகில் பிரபல்யமான தமிழ் இணைய ஆர்வளர் திரு.பாலா பிள்ளை அவர்கள் விருதை வழங்கினார்கள், உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர். அப்துல் காதர் அவர்களும், உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் மொய்னுதீனும் விருதை பெற்றுக் கொண்டனர்.

உமர்தம்பி தம்பி அவர்களின் மகனும், சகோதரரும் துணை முதல்வர் மான்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்கள், உமர்தம்பி அவர்களின் தமிழ் சேவையை துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார்கள், உமர்தம்பிக்கு அங்கீகாரம் தர தம்மிடம் நிறைய கோரிக்கைகள் வந்தாகவும் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறினார்கள்.

மேலும் விபரங்கள் புகைப்படங்களுடன் விரைவில் வெளியிடப்படும்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.

Friday, June 25, 2010

உமர்தம்பி அரங்கம் - முதல் புகைப்படங்கள்

தேனீ எழுத்துரு தந்த அதிரை உமர்தம்பி அவர்களின் பெயரில் அரங்கம் தமிழ் இணைய மாநாட்டில் உள்ளது என்பது நாம் அறிந்த செய்தி, அவ்வரங்கத்தின் புகைப்படங்களை பாருங்கள். புகைப்படங்களை பார்த்ததும் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?







தமிழ் நாட்டில் அதிரையில் பிறந்த உமர்தம்பியை 'துபாய் உமர்தம்பி' என்று பெயரிட்டிருப்பது முதலில் சிறிய வருத்தமாகத் தான் இருந்தது,  துபாயில் இருக்கும் காலத்தில் தான் உமர்தம்பி தமிழ் இணைய மக்களிடம் பிரபல்யமானார்,  உமர்தம்பி மரணித்த போது அவர் துபாயில் இருப்பதாகத் தான் அனேக தமிழ் இணையவாசிகள் எண்ணியிருந்தார்கள், தமிழ் இணைய ஆர்வளர்களிடம் துபாய் உமர்தம்பி என்று அறியப்பட்டதால் 'துபாய் உமர்தம்பி அரங்கள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மாநாட்டு அமைப்பாளர்களிடமிருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது. உமர்தம்பி என்ற பெயர் தமிழ் இணையம் ஒரே ஒரு நபரை மட்டும் தான் ஞாபப்படுத்தும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

Thursday, June 24, 2010

அதிரை உமர் தம்பி – நன்றி மடல்

தமிழ்கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவையை அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர் தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது உலகறிந்த செய்தியாகிவிட்ட போதிலும் இவ்விசையத்தில் இதற்காக உண்மையில் உழைத்த தன்னலமற்ற தனிப்பட்ட நபர்கள் முக்கியமாக கூறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவர்கள். உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது விசையத்தில் இறைவனுக்கு தெரியும் யார் உண்மையில் உழைத்து என்று.

அதிரை உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் அளித்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், துணை முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி.

இம்முயற்சியில் முழு முயற்சி எடுத்து முதல்வருக்கு கடிதம் எழுதி, துணை முதல்வர் அவர்களின் கவணத்துக்கு எடுத்துச் சென்ற அதிரையை சேர்ந்த அன்பு சகோதரி கவிஞர் மலிக்கா பாருக் அவர்களுக்கும், அவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த சகோதரர். வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள். இவர்களின் முயற்சி தொடர்பான முழு விபரங்கள் சகோதரி மலிக்கா அவர்களின் நீரோடை வலைப்பூவில் விபரமாக பதிவாகி உள்ளது.

----------------------------------------------------
தற்போதைய செய்தி ‘துபாய் உமர்தம்பி அரங்கு’ என்ற பெயரை பார்த்ததும் எனக்கு சிறிய வருத்தம், உமர் தம்பி இந்திய குடிமகன், ஒரு தமிழர், இம்மண்ணில் பிறந்து இம்மண்ணில் மறைந்துள்ளார். ‘அதிரை உமர் தம்பி அரங்கு’ என்று போட்டிருக்கலாம், இல்லாவிட்டாலும் தேனீ எழுத்துரு தந்தவரை ‘தேனீ உமர் தம்பி அரங்கு’ என்றாவது போட்டிருக்கலாம்.  ‘சந்தோசத்திலும் துக்கம் இருக்கத்தான் செய்யும்’ என்ற நினைப்புடன் மனதை சமாதானம் செய்து தானே ஆக வேண்டியுள்ளது இக்காலத்தில்.

Wednesday, June 16, 2010

உமர்தம்பி பெயரில் விருது - சிங்கப்பூரில்

தேனீ உமர்தம்பி அவர்களின் பெயரில் விருது சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக சென்ற மாதம் விருது வழங்கப்பட்டது இது பற்றிய செய்தியை இங்கு மீண்டும் என் வலைப்பூவில் பதிவு செய்வவதில் பெருமையடைகிறேன்.


சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா இன்று(மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் மாலை 6.00 மணியிலிருந்து கலைக்கட்டியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மணற்கேணி 2009 சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு (திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம்) விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.

இந்த மாபெரும் விழாவை திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ், திருமதி ஜெயந்தி சங்கர்,  திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான், திரு.பாண்டியன்,  திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க துணையாக இருந்தார்கள். விழாவின் முடிவில் உணவும் வழங்கப்பட்டது.

நன்றி அம்மா அப்பா வலைப்பூ

தன்னலம் விரும்பாத தாய்தமிழ் தொண்டர் தேனீ உமர்தம்பி பெயரில் விருது வழங்கி சிறப்பித்த சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், தமிழ்வெளி திரட்டி இணையதளம் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் உமர்தம்பி குடும்பத்தார், நண்பர்கள் அதிரைவாசிகளின் சார்பாக அன்பான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். உங்களின் தமிழ் சேவை இவ்வுலகம் இருக்கும் நாள் வரை தொடர எங்கள் வாழ்த்துக்கள்.
 
இச்செய்தியை மீண்டும் எனக்கு ஞாபகப்படுத்திய அன்பு சகோதரர் ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி.

Tuesday, June 15, 2010

உமர்தம்பி - பிறந்ததினம் இன்று..

கணிணியில் தமிழைத் தடங்கின்றி தட்டச்சிட உதவும்வகையில் தேனீ எழுத்துருவை அனைவரும் பயன்படும் வகையில் உருவாக்கித் தந்தவரான தேனீ உமர்தம்பி பிறந்த தினம் இன்று (15-06-2010).

இச்செய்தியை இன்று காலை வெளியிட்ட சுவரொட்டி வலைப்பூவிற்கு மிக்க நன்றி